தர்பார் இசைவெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்த ரஜினி..!
in darbar movie rajinikanth speech
திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவந்த தர்பார் திரைப்படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தின் முதற்படலானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி., பெரும் வைரலாகி வந்தது.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவானது சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்புகள் வெளியாகி., ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வெளியான நிலையில் அரசியல் பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசிய சமயத்தில்., இயக்குனர் பாலச்சந்தரால் ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டேன். நான் நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் நம்பிக்கையை நான் காப்பாற்றினேன்.
இதனைப்போன்று மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை கட்டாயம் பேசுவேன்.. அது என்றும் வீண்போகாது.. ஒரு வெற்றிக்கு காலம்., நேரம்., சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை போன்றவை அமைய வேண்டும். அதற்காக காத்திருந்து வெற்றியை பெற வேண்டும்.
எனது பொறுமையை பலரும் எதிர்மறையாக பேசி வரும் நிலையில்., எனது சூசகமான அரசியலிற்கு நேரம்., காலம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை வரும்.. அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. இயக்குனரின் ரமணா மற்றும் கஜினி திரைப்படம் எனக்கு பிடிக்கும்.
அன்றைய நேரத்திலேயே ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.. ஆனால் அது அமையவில்லை.. தற்போதுதான் அமைந்தது என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in darbar movie rajinikanth speech