நடிகர் அஜித்தை சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்.! கண்ணீர் கடலில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதர் என்று பொதுமக்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். ரசிகர் மன்றமே இல்லாமல் பல ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகர் அஜித்குமார். இவர் திரைத்துறையில் பல சோதனைகள், தடைகளை தாண்டி உச்சத்தை தொட்டுள்ளார். 

நடிகர் அஜீத் குமாரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கோலபுடி மாருதி ராவ். இவர் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் அஜீத் குமாரை அறிமுகம் செய்தார். கோலபுடி மாருதி ராவ் நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என சினிமா துறையில் பன்முகத்தன்மை கொண்டவர். 

தமிழ் சினிமாவில் முத்து, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்துள்ளார். 80 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று கோலபுடி மாருதி ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gollapudi maruti rao passes away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->