ரசிகரைத் தாக்கிய பிரபல பாடகர்! நடந்தது என்ன?
famous singer attacked fan
இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகராக உள்ள உதித் நாராயணன் தமிழில் சோனியா சோனியா, காதல் பிசாசு, எங்கேயோ பார்த்த மயக்கம் போன்ற வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் இவரது மகன் பாடகர் ஆதித்யா நாராயணன் சத்தீஸ்கர், பிலாய் பகுதியில் உள்ள கல்லூரி இசை நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பாடலை பாடியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் தன் செல்போனால் ஆதித்யாவின் காலை தட்டில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா தன் ஒலிவாங்கியால் அவரது தாக்கி செல்போனை பறித்து தூக்கி எறிந்துள்ளார்.
இதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
famous singer attacked fan