சந்திரமுகி 2 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது.! இதுவும் அரண்மனை கான்செப்ட்டா.! - Seithipunal
Seithipunal


கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா,நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே 200/கோடி பட்ஜெட்டில் தயரான இந்த படம் ரூ. 650 கோடி கிட்டதட்ட படம் வசூலித்தது., 2 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது

இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் ஹீரோயினாக அனுஷ்கா, நகைச்சுவை நாயகனாக வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

மேலும், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஜிகர்தண்டா 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தேதி வெளியாகி இருக்கிறது. ஜூலை 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், மைசூரில் இருக்கும் அரண்மனை ஒன்றில் இதற்கான படப்பிடிப்பு 25 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandramukhi 2 shooting update 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->