திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அமைச்சர் அறிவிப்பு.!!
central minister says about theater open
தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி. மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.
கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி. தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும். தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி .இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது. அப்போது திரையரங்குகளை திறப்பது குறித்து அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு நிலையை பொறுத்து, திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
English Summary
central minister says about theater open