நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பிரச்சனையில் இருந்து ரசிகர்களின் அன்பினால் கடினமான காலத்தை கடந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது யசோதா திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில் இந்த மாதம் முதல் வார தொடக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மயோசிடிஸ் நோயால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Samantha again admitted to the hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->