பிரபல நடிகை ரம்பா குடும்பத்தினருடன் சென்ற கார் விபத்து.. மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதன் பிறகு தனது க்யூட்டான நடிப்பால் ரஜினி, கார்த்தி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

இதனையடுத்து நடிகை ரம்பா கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் நடிகை ரம்பா நேற்று தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Ramba car accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->