தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு.. அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மதுபானங்களில் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு வாணிபகழகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. பீர்பாட்டில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வால் மதுபானங்கள் விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கூடுதலாக சுமார் 200 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுபான விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rising alcohol prices in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->