புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.102.23-க்கும், டீசல் விலை ரூ.94.39-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 0.26 காசுகள் அதிகரித்து, ரூ.102.49-க்கும், டீசல் விலை மாற்றமின்றி ரூ.94.39-க்கும் விற்பனை ஆகிவருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 17petrol price in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->