இன்று சென்னை - பஞ்சாப் அணிகள் மீண்டும் மோதல்.. தோல்விக்கு பழி தீர்க்குமா சென்னை.?
CSK vs PBKS Match again Today
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ளதால் அனைத்து அணிகளும் முண்டியடித்துக்கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு, 37 ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றத்துடன் போட்டி தொடங்கியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதுகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 180 ரன்களை குவித்த பஞ்சாப் அணி, சென்னை அணியை 126 ரன்களில் சுருட்டியது. இதனால் இந்த போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குகின்றது பஞ்சாப் அணி.
இதேசமயம் தோல்விக்கு பழி தீர்க்க வேண்டும் என சென்னை அணியும் ஆவலுடன் உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த சில போட்டிகளாக அதிகளவில் ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய போட்டியிலும் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது.
English Summary
CSK vs PBKS Match again Today