வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை.. தர்மபுரி அருகே நிகழ்ந்த கொடூரம்..!
Mysterious death of a woman who was alone at home
பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி . இவர் தனியே வசித்து வருகிறார். அவரின் மகள் மற்றும் மகன்கள் கோவிலுக்கு சென்றதால் அவர் தனது மகள் வீட்டில் தனியே இருந்துள்ளார். இதனை அடுத்து, அவரது பேத்தி கல்லூரி முடித்து விட்டு வந்த பார்க்கும் போதுபாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் சடலம் கிடந்த இடத்தை ஆய்வு செய்த போதுஒரு கத்தியும், எலுமிச்சம் பழமும் இருந்துள்ளது.
இந்திராணி உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு மந்திரம் போட்டு சரிசெய்பவர் என கூறப்படுகிறது. இதனால், அவரிடம் மந்திரம் போட வந்த யாராவது அவரை நகைக்காக கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mysterious death of a woman who was alone at home