பெருவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 24 பேர் பலி
24 killed in Bus accident in peru
வடமேற்கு பெருவில் 60 பயணிகளுடன் சென்ற பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருவின் லிமாவில் இருந்து 60 பயணிகளுடன் ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பஸ் நோக்கி கொரியாங்கா டூர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஆர்கனோஸ் நகருக்கு அருகே மலைப்பாதையில் டெவில்ஸ் வளைவில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் ஹெய்ட்டியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
24 killed in Bus accident in peru