சென்னை ஸ்ட்ராங் ரூமில் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு! சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பா?
Chennai strong room Radhakrishnan inspection
நீலகிரி, ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் கேமராக்கள் பழுதானதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் சென்னை பெருநகர் காவல் ஆணையரும் ஆய்வு செய்தார். இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் ஆய்வு செய்த பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், வாக்கு என்னும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போதுமான கேமராக்கள் இருக்கிறதா முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
சென்னையில் 3 தொகுதி வாக்கு என்னும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்க்கு 140 போலீசார் வீதம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
Chennai strong room Radhakrishnan inspection