ஆசையாய் வளர்த்த ஆன் குழந்தை, தாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த சோக சம்பவம்!.
young boy died front of his mom
சென்னை கோவிலம்பாக்கம் அருகே நன்மங்கலம் பகுதியில் வசித்து வருபவர் தீனதயாளன். இவர், கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவி இந்துவிற்கும் 3 வயதில் கனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளான்.
இந்தவருடம் புத்தாண்டிற்கு முதல் நாள், சிறுவன் கனீஷ் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கு கிடந்த ஒரு கோலி குண்டை எடுத்து வாயில்போட்டு விழுங்கியுள்ளான். அந்த கோலி குண்டு, குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் கனீஷ் மூச்சுத்திணறலால் சிரமப்பட்டு மயங்கிவி ழுந்துள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து, அண்டைவீட்டாரின் உதவியுடன் சிறுவன் கனீஷை பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் கனீஷ், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்ததுள்ளான். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆசையாய் வளர்த்த சிறுவன் தாயின் கண்முன்னரே துடுதுடித்து உயிரைவிட்ட விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
young boy died front of his mom