மறைந்த ரசிகர் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா (வயது 30) சென்னை, கேகே நகர் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

நடிகர் ஜெயம்ரவி மீது அன்பு கொண்டிருந்த இவர், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜா சமீபத்தில் உயிரிழந்து விட்டார். தனது ரசிகரின் மரணத்தை அறிந்த நடிகர் ஜெயம் ரவி ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

மேலும் அவரது குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் தான் செய்து தருவதாக நடிகர் ஜெயம் ரவி உறுதியளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam Ravi consoled fan death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->