அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகளின் கதி என்ன?   - Seithipunal
Seithipunal


திருச்சி, லால்குடி அரசு பேருந்து இன்று காலை 8 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

திருச்சி, லால்குடி மேட்டுப்பட்டி பகுதியில் அரசு பேருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றுக் கொண்டு சத்தியம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

அப்போது எதிரே மற்றொரு அரசு பேருந்துக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலையோரம் பேருந்தை ஒதுக்கி உள்ளார். 

இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீது சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். 

மேலும் இரண்டு பயணிகள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Government bus overturned accident 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->