மீண்டும் கைதாகிறார் சசிகலா! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Sasikala Bangaluru Court
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகிய சசிகலா, கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையிலில் அடைபட்டிருந்தார்.
அப்போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்துவந்தார்.
இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் (கைது செய்து ஆஜர்படுத்தும் உத்தரவு) பிறப்பித்துள்ளது.
மேலும், சசிகலா, இளவரசிக்கு ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பெங்களூரு நீதிமன்றம், வழக்கு விசாரணை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.