உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை கொடூர கொலை செய்த கணவன்.! கண்ணீரில் உறவினர்கள்., தாயை தேடும் 7 மாத பிஞ்சு குழந்தை.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் அருகேயுள்ள பள்ளிப்பட்டி அண்ணாநகர் காலனி பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மகனின் பெயர் மாதேஷ் (27)., இவர் கம்பிக்கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இவருக்கும் சேலம் இரும்பாலை பகுதிக்கு அருகில் உள்ள தளவாய்பட்டி பகுதியில் வசித்து வரும் வடிவேல் - பச்சியம்மாளின் மகளான சசிகலா (வயது 23) என்பவருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த வருடத்தில் கர்ப்பிணியாக இருந்த சசிகலா தனது 7-வது மாதத்தில்., பிரசவத்திற்க்காக தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இவர் அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக கடந்த 7 மாதங்களாக தனது தாயாரின் இல்லத்திலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  

இந்நிலையில்., நேற்று மாலை நேரத்தில் தனது மாமனாரின் இல்லத்திற்கு வருகை தந்த மாதேஷ்., திடீரென சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார்.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கணவர் மாதேஷிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் முடிவில்., கணவர் மாதேஷ் அளித்த கொலைக்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். 

விசாரணையில் அவர் தெரிவித்ததாவது., சம்பவத்தன்று மாதேஷ் தனது குழந்தையை காண வ்ருவதாக கூறியதை அடுத்து., அவருக்கு இறைச்சி குழம்பு மற்றும் இதர பொருட்களை தயார் செய்து சசிகலாவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வழங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்த மாதேஷ் குழந்தையை கேட்ட போது., குழந்தை உறங்கிக்கொண்டு இருந்த காரணத்தால் குழந்தை உறங்கிக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளனர். 

அந்த நேரத்தில் வீட்டின் நாற்காலியில் இருந்த அவர் பின்னர் உணவை பரிமாறுமாறு கூறவே., சாப்பாடுக்கு தேவையான பொருட்களை எடுப்பதைக்காக சசிகலா சமயலறைக்குள் சென்றுள்ளார். அவருக்கு பின்னதாக மாதேஷும் சென்றுள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர்., அவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்று நினைத்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர். 

வீட்டிற்குள் சசிகலாவின் பின்னால் சென்ற அவர் கதவை தாளிட்டு., தாம்பத்தியத்திற்கு அணுகியுள்ளார். அதற்கு சசிகலா., அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றடுத்த காரணத்தால்., இப்போது கூடாது உடல் நிலை சரியானவுடன் கூடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர் சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் தலையை வைத்து மிதிக்கத் தொடங்கினர்.

வீட்டிற்கு வெளியே இருந்த பச்சியம்மாள் இருவரின் சத்தமும் இல்லாததால்., வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அந்த நேரத்தில் கதவு தாளிட்டு இருந்ததை கண்டு ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது., தனது மகளை கொலை செய்யும் நோக்கில் மாதேஷ் காலை தனது மகளின் கழுத்து மீது வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறவே., இதனை எள்ளவும் காதில் ஏற்றாத மாதேஷ் கழுத்தை தொடர்ந்து அழுத்தமாக மிதக்கவே., அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து சசிகலாவின் தாயார் கூச்சலிட்டதை அடுத்து கதவை உடைத்து கொண்டு உறவினர்கள் உள்ளே செல்வதற்குள்., அவர் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து அவரை கட்டி வைத்து அனைவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும்., அதற்கு பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாதேஷை கைப்பற்றி காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் வெளிவந்தது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam a wife killed by her husband due to his wife not interest to sex relation due to some problems


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->