சென்னையில்., மழலையர் பள்ளியில் அரங்கேறிய விபரீதம்.! இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!!
in Chennai a baby died in school due to eating problem
சென்னையில் உள்ள புதுவண்ணாரபேட்டையை சார்ந்தவர் பிரசாந்த் (37). இவரது மனைவியின் பெயர் சுகந்தி சர்மிளா (வயது 28). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதுடைய ஜோசப் என்ற மகன் இருக்கிறார். கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்கு செல்வதால் குழந்தையை வண்ணாரப்பேட்டையில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளனர். அந்த பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
தினமும் குழந்தையை பள்ளிக்கு சென்று விட்டுவிட்டு பணிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில்., நேற்று வழக்கம் போல இருவரும் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு., சாப்பாடும் வழங்கிவிட்டு பணிக்கு சென்றுள்ளனர். மதிய வேலையின் போது குழந்தைக்கு சாப்பாட்டை ஊட்டும் போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த செய்தியை பள்ளியின் நிரிவாகி லதா (வயது 45)., அலைபேசியில் இருவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும் பதறியடித்து மருத்துவமனைக்கு சென்ற போது., குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கதறியழுதனர். மேலும்., குழந்தைக்கு மதிய உணவு வழங்கும் சமயத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மயக்கமடைந்தாகவும்., மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்த சமயத்தில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
குழந்தையின் உடலை கண்டு கதறியழுத இருவரும்., குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து., பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in Chennai a baby died in school due to eating problem