தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு 2 நாள் விடுமுறை - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை செய்ய வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தலில் முன்னிட்டு பல்வேறு தனியார் அமைப்புகளும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திரையரங்குகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சென்னை கோயம்பேடு மார்க்கெட்க்கு தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது கோயம்பேடு வியாபாரிகள் சங்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defined Election koyambedu market holiday


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->