சீரியல் வில்லியை தாண்டிய சித்தி மகளின் சித்து! கேள்விக்குறியான குழந்தைகளின் வாழ்க்கை! காட்டிக்கொடுத்த பேனா!
சீரியல் வில்லியை தாண்டிய சித்தி மகளின் சித்து! கேள்விக்குறியான குழந்தைகளின் வாழ்க்கை! காட்டிக்கொடுத்த பேனா!
அக்கா கணவர் மேல் கொண்ட ஆசையால் சொத்துக்காகவும், கள்ளத் தொடர்பை மறைக்கவும் சொந்த அக்காவையே கள்ளக்காதலனை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண். கள்ளகாதலனும், ஆசைநாயகியும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரை சேர்ந்தவர் பூபாலன், தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். பூபாலன் மனைவி நதியா, நதியாவின் சித்தி மகள் ரேகா. ரேகாவின் கணவர் கஜேந்திரன், ரேகாவிற்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவர் கஜேந்திரனுக்கு தெரியாமல் நாகராஜ் என்பவருடன் ரேகா கள்ள தொடர்பு வைத்திருந்தார்.
நாகராஜ் உடனான ரேகாவின் கள்ள உறவை ரகசிய பேனா கேமரா வைத்து கண்டுபிடித்தார் கணவர் கஜேந்திரன். அதனால் அவர்களுக்குள் பிரச்னை வர விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தன் தங்கை ரேகாவின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை அறியாத நதியா தனது கணவரை அனுப்பி ரேகாவை பார்த்து ஆறுதல் கூற அனுப்பியுள்ளார்.
ஆனால் ஆறுதல் கூற வந்த அத்தானையும் அனைத்துவிட்டார் ரேகா. இவை அனைத்தும் ரகசிய கேமராவில் பதிவு ஆகிவிட்டது. ரேகாவை பார்க்க அக்கா கணவர் பூபாலன் அடிக்கடி போக, ஒருமுறை தன் மகளை அழைத்து சென்றுள்ளார். விவரம் அறியா சிறுமி அந்த பேனா கேமராவை கொண்டு வந்து நதியாவிடம் கொடுத்துவிட்டது.
தனது தங்கை ரேகா, வேறு ஒரு இளைஞருடனும், தனது கணவர் பூபாலனுடனும் படுக்கை அறையில் அந்தரங்கமாக காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தார் நதியா. ரேகாவிடம் சண்டையிட ரேகாவோ அக்காவையே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்ய திட்டமிட்டு தீர்த்து கட்டிவிட்டார்.
நதியாவை கொன்று விட்டு கள்ளக்காதலன் நாகராஜ் ஜெயிலுக்கு சென்றால், கணவரிடம் விவாகரத்து பெற்று, அக்கா இறந்ததை காரணம் காட்டி, புதிய வீடு, கை நிறைய பணம், என்று வசதியாக வலம் வந்த பூபாலனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழலாம் என்று பலமான திட்டத்தை தீட்டினார்.
ஆரம்பத்தில் இதனை நகைக்காக நடந்த கொலை என்று விசாரித்த போலீசார், நாகராஜ், ரேகா ஆகியோருக்கு இடையேயான செல்போன் பேச்சு விவரங்களை அடிப்படையாக வைத்து விசாரித்ததில் ரேகாவின் லீலைகளை கண்டுபிடித்துவிட்டனர் . நாகராஜிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் ,5 பவுன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகராஜையும், ரேகாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
English Summary
cousin relationship with her husband, illegal husband killed sister