கூலிப்படை தலைவனை ஜாமினில் எடுத்த ஸ்டாலின் நல்லவரா? மக்களே தீர்மானியுங்கள்!
Tamilnadu CM Edapadi K Palanisami Talk
சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
* கோடநாடு விவகாரத்தில் சயானுக்கு திமுகவினர் தான் ஜாமீன் எடுத்துக் கொடுத்துள்ளனர். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடநாடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
* ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை என் மீது ஜோடிக்கின்றனர்.
* தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி திமுகவால் செய்யப்பட்ட நாடகம். கோடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன்.
* ஜெ. மறைந்த பிறகு கோடநாடு தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது; கோடநாடு சம்பவம் கூலிப்படையினர் செய்தனர். கோடநாட்டில் ஆதாரம் இருந்தால் சசி குடும்பத்தினர், எங்களை சும்மா விடுவார்களா!
* கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதே பொய் வழக்கு போடும் திமுக, ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?.
இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி பேசி வருகிறார்.
English Summary
Tamilnadu CM Edapadi K Palanisami Talk