திமுகவுக்கு எதிராக இது நடக்கும்.!! எம்ஜிஆர் பிறந்தநாளில் சசிகலா சூளுரை.!!
Sasikala said will Unite diverted Aiadmk soon
அதிமுக நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம் ஜி ராமச்சந்திரனின் 107 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதிமுக கட்சி சார்பில் தமிழக முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எம்ஜிஆரின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வரும் நிலையில் வி கே சசிகலா தனது இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழ்நாட்டில் இப்போது நடக்கக்கூடிய ஆட்சியால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் திமுக ஆட்சிக்கு வந்தபின் மக்கள் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுக்கின்றனர்.
திமுகவை வீழ்த்த அதிமுக அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுக இதற்கு முன்பு எப்படி பலம் வாய்ந்ததாக இருந்ததோ, அதுபோல தற்போது பிரிந்து கிடக்கும் அனைவரும் விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன்.
நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி கட்சியையும் தொண்டர்களையும் மறந்து விட்டதாக அதிமுக தொண்டர்களே எண்ணுகிறார்கள். இதனால் தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.
செவிடன் காதில் சங்கு ஊதியது போல தொடர்ந்து போக முடியாது. இதனால் தொண்டர்கள் கொதித்து எழுவார்கள். எல்லாரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நாம் செலுத்திய பெரிய நன்றி கடன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Sasikala said will Unite diverted Aiadmk soon