சசிகலா எங்களுடன்.. ஈபிஎஸ் திகார் சிறைக்கு.. அடித்து சொல்லும் ஓபிஎஸ்.!!
OPS said Sasikala with us EPS going Tihar Jail
அந்த ரகசியம், சரியான நேரத்தில், சரியான இடத்தில் சொல்வேன்.!!
கிருஷ்ணகிரியில்செய்தியாளர்கய் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் "முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய போது அடிப்படை
தொண்டர்களும் பொதுச்செயலாளர் ஆகும் வகையில் பல்வேறு சட்டவிதிகளை வகுத்தார். அவற்றை உடைத்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராகி உள்ளார். அதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் அதிமுக மீட்புகுழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம்.
இரு அணிகளாக செயல்பட்டு பிரிவதால் தான் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. ஈபிஎஸ் முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் ஆன பின் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். அதிமுகவின் பல பிரிவுகள் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும்.
ஏற்கனவே டிடிவி தினகரனுடன் இணைந்து விட்டோம், கொள்கை ரீதியாக அவர்கள் சில கோரிக்கைகள் வைத்தது போல நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்படவுள்ளதை அவரே விரைவில் அறிவிப்பார். நம்பிக்கை துரோகிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் கட்சியின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார்.
கோடநாடு வழக்கில் நீதிமன்றம் ஈபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறியதையும் வரவேற்கிறோம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஈபிஎஸ் விரைவில் திகார் சிறைக்கு செல்வார் என்று பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம்; சரியான நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
OPS said Sasikala with us EPS going Tihar Jail