ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை... மம்தா பானர்ஜி பரப்புரை.!
Mamata Banerjee election campaign
மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தீவிர பிரசாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், பா.ஜ.க முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது. இந்திய கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சி ஏஏ ரத்து செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை நான் பார்த்ததில்லை.
எனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் 126 சட்டமன்ற தொகுதியிலும் எனது கட்சி போட்டியிடும். இது வெறும் டிரைலர் தான் பைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee election campaign