மத்திய அரசு வைக்கும் செங்கல்லில் உதயநிதி கோட்டையை கட்டி விடுவார்... கமல்ஹாசன் தாக்கு.!
Coimbatore Kamal Haasan speech
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவையில் கடந்த மூன்று நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கோவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்,
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணம் இன்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.
என்னிடம் தோல்வியை காட்டி பயப்படுத்த முடியாது. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாஜக அரசு.
அதை பகிரங்கமாக கேட்டவன் நான். தனது வீட்டை நாட்டுக்காக எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழக முதல் இடத்தில் உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை எடுத்துக்காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கலை மட்டும் வைத்து செல்கிறது.
அதை வைத்து உதயநிதி ஸ்டாலின் கோட்டையை உருவாக்கி விடுவார். பாராளுமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
இந்த தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. உலகத்திலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடைபெற உள்ள இந்த தேர்தல்தான் என தெரிவித்துள்ளார்.
English Summary
Coimbatore Kamal Haasan speech