குற்றம் செய்வதில் பெரிய நாடு ரஷ்யா! தைரியத்தில் பெரிய நாடு உக்ரைன் என செலன்ஸ்கி பேச்சு.! - Seithipunal
Seithipunal


தைரியத்தில் ரஷ்யாவை விட உக்ரைன் பெரிய நாடு என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 47 -வது நாளாக தக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாடும் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் மிகவும் தைரியமானவர்கள் என அதிபர் செலன்ஸ்கி பாராட்டி உள்ளார். மேலும், தீமை செய்வதில் மிகப் பெரிய நாடு ரஷ்யா என்றும், தைரியத்தில் பெரிய நாடு என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டு மக்கள் மீதான தாக்குதலுக்கும், அவர்களின் உயிரிழப்பிற்கும் ரஷிய போர் வீரர்கள் மற்றும் அவர்களின் தளபதிகளே பொறுப்பேற்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து நாடுகளும் ரஷிய வங்கிகள் மீது பொருளாதாரத் தடையையும், எண்ணெய் இறக்குமதிக்கான தடையையும் விதிக்க வேண்டும் எனவும் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zelensky speech about Ukraine people


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->