செல்போன் திருடிய திருடனிடமே மனதை பறிகொடுத்த இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் தன் செல்போன் திருடிய திருடனையே இளம் பெண் காதலித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருடன் ஒருவர் இளம் பெண்ணின் கையில் இருந்த செல்போனை திருடி சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டும் யாரும் இல்லாததால் திருடன் தப்பி சென்றுள்ளார். அதன் பின்னர் சில நேரம் கழித்து செல்போனை திருடி சென்ற திருடன் செல்போனில் இருந்த அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறார் என வியந்துள்ளார்.

மேலும், மீண்டும் அவரிடமே வந்து திருடிய செல்போனை கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதில், மனம் திருந்திய திருடனிடம் இளம் பெண் மனதை பறி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாக அந்த ஜோடி சமீபத்தில் பேட்டி அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young women love theft person


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->