உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி உடைந்து விபரீதம்.! அரிய வகை மீன்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய அக்வாடோம் என பெயரிடப்பட்ட மீன் தொட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பிரபல ராடிசன் புளூ ஹோட்டலில் உள்ளது. சுமார் 25 மீட்டர் உயரம் மற்றும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடியால் ஆன இந்த மீன் தொட்டியில் 100 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 1500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

மேலும் மீன்தொட்டிற்கு நடுவே எலிவேட்டர் மூலம் சுற்றி பார்க்கும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை எதிர்பாராத விதமாக மீன் தொட்டி உடைந்து சிதறியது. இதனால் தண்ணீர் முழுவதும் ஹோட்டலில் வெளியே ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

மீன் தொட்டியிலிருந்து சிதறிய நூற்றுக்கணக்கான மீன்கள் துடிதுடித்து இறந்தன. இதையடுத்துக்கு தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஹோட்டலில் வெளியே மற்றும் தரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீன்களை மீட்டு மற்ற மீன் தொட்டிகளில் விட்டனர்.

இந்த விபத்தில் மீன் தொட்டியின் கண்ணாடி சிதறியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலான மீன்கள் இறந்துவிட்ட நிலையில், எத்தனை மீன்கள் இறந்துள்ளன மற்றும் காப்பாற்றப்பட்டுள்ளன என்று முழுமையாக தெரியவில்லை என்று ஹோட்டல் ஊழியர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹோட்டலின் உள் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி வரைக்கும் குறைவாக சென்றதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்திருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world big fishtank explodes in Germany hotel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->