உக்ரைனில் போரினால் 5000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழப்பு.! ஐநா தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் போரினால் 5000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளன.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN says More than 5000 people died in Ukraine


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->