உ.பி : சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோபிகஞ்ச் அருகே ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு பதினாறு வயது சிறுமி ஒருவர் அஜய் குமார் யாதவ் என்ற வாலிபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் அஜய் குமார் யாதவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக  இருபது ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், குற்றவாளிக்கு ரூ.முப்பத்து ஐந்து ஆயிரம் அபராதம் விதித்து, அதில் ரூ. இருபத்தைந்து ஆயிரத்தை பாதிக்கப்பட்டவருக்கு தர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty years jail penalty to young man fopr sexuall harassment case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->