ஈரானால் அணு உலைகளை மீண்டும் கட்டமைக்க முடியாது; டிரம்ப் சொல்கிறார்!
Trump says Iran cannot rebuild nuclear facilities
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 13ம் தேதி தொடங்கிய அணு மையங்களை குறிவைத்த தாக்குதல் தொடர்ச்சி, தற்போது 11 நாட்களுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானின் அணு ஆய்வுக் கூடங்கள், ஏவுகணை மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை தடுக்கவே இந்த நடவடிக்கை என இஸ்ரேல் விளக்கம் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணு உலைக்கள் மீது அமெரிக்கா கடந்த 21ம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலளிக்க ஈரானும் சில ராணுவ தளங்களை தாக்கியது.
இந்தநிலையில் போர் பதற்றம் 11 நாட்களுக்கு பிறகு தற்காலிக சண்டை நிறுத்த ஒப்புதலால் ஓரளவு சாத்தியமானது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இருவரும் சண்டையை நிறுத்த சம்மதித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் அமைதி நிலவ வாய்ப்பு உள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் கூறியதாவது:
“ஈரான் மீதான தாக்குதலின் போது குறிவைக்கப்பட்ட அணு உலைக்கள் மீண்டும் கட்டமைக்க முடியாதவையாக மாற்றப்பட்டுள்ளன. அந்த உலைக்கள் பாறைகளுக்குள் இருந்தன. ஆனால் எங்கள் பி-2 பாம்பர் விமானிகள், எந்த எதிர்ப்பும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர்.”என கூறினார்.
English Summary
Trump says Iran cannot rebuild nuclear facilities