ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க மேலும் ஒரு மாதம் அனுமதி வழங்கியுள்ள அமெரிக்கா..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக விதமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கடந்த மார்ச் மாதம் மூடியது. உலகளவில் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த வழித்தடத்தில், எரிபொருளுக்கு உலகம் முழு​வதும் தட்டுப்பாடு ஏற்​பட்டது. இதனால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்​தது.

இதையடுத்து ஈரான் மற்​றும் ரஷ்​யா​விடம் இருந்து எரிபொருள் வாங்க விதிக்​கப்​பட்​ட தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா விலக்கு அளித்​தது. இதனைப் பயன்​படுத்தி ரஷ்​யா​வின் ராஸ்​நெப்ட், லுக்​ஆ​யில் ஆகிய நிறு​வனங்​களிடம் இருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வந்தன. இந்த விலக்கு கடந்த 11 ஆம் தேதி​யுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அளிக்கப்பட்ட தடை விலக்கை வரும் மே 16 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போர் காரணமாக கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமம் ஈரான், கியூபா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய எந்த வர்த்தகத்திற்கும் அனுமதிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The US has granted India permission for one more month to purchase crude oil from Russia


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->