#ஜெர்மனி || சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜெர்மனியில் த்ரேசா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், துப்பாக்கியுடன் புகுந்த 58 வயதான நபர், அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த 53 வயதான பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் வைத்திருந்த அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The man who fired the shots shot himself and committed suicide in germany


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->