பாலம் திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்து விபத்து.. பலர் படுகாயம்.!
The bridge collapsed during the opening ceremony in Mexico
திறப்பு விழாவின் போது புதிதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பு ஜெயினால் புதிதாக நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை மேம்பாலம் அந்நகர மேயர் என்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவிற்கு பிறகு அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்நகர மேயர் ஜோஸ் லுயிஸ் உட்பட பலர் 10 அடி பள்ளத்தில் பலர் விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். மேலும் அளவுக்கு அதிகமான பாரம் இருந்ததால் எடை தாங்காமல் நடைமேடை பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
English Summary
The bridge collapsed during the opening ceremony in Mexico