பாகிஸ்தானில் நள்ளிரவில் நடந்த கொடூரம் - பிரிட்ஜ் வெடித்து 7 மாத குழந்தை உள்பட 10 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் நள்ளிரவில் நடந்த கொடூரம் - பிரிட்ஜ் வெடித்து 7 மாத குழந்தை உள்பட 10 பேர் பலி.!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் மெகல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு 2 மணியளவில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதியினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி தீயணைப்பு படையினருடன் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அங்கு கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கும் தீயை பலமணி நேரம் போராடி கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது வீடு முழுவதும் உடல்பாகங்கள் கருகிய நிலையில் ஆங்காங்கே கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் விவரம் பின்வருமாறு:- "வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரிட்ஜின் கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து கரும்புகை வெளியானது. 

இந்தப் புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உள்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகியாது தெரிய வந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten peoples died for fire accident at mid night inpakisthan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->