மகனின் உறைய வைத்த விந்தணுவின் மூலம் பிறந்த குழந்தை! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


‌ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த 68 வயது நடிகையும்  தொலைக்காட்சி தொகுப்பாளருமான அனா ஒப்ரெகன் பிறந்த ஒரு வாரமேயான அனா  சாண்ட்ரா என்ற குழந்தையை தத்தெடுத்து இருக்கிறார். இந்தக் குழந்தை கியூபா நாட்டைச் சார்ந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையாகும் . வாடகை தாயான அந்த பெண்ணிற்கு  நடிகையின் இறந்து போன மகனின்  விந்தணுக்களின் மூலம் இந்த குழந்தை பிறந்திருக்கிறது.

இதன் மூலம் தனது பேத்தியை மகளாக தத்தெடுத்து இருக்கிறார் அனா. தனது இறந்து போன மகனின் விந்தணுவின் மூலம்  பிறந்த குழந்தையை இவர் தத்தெடுத்து இருப்பதால்  ஸ்பெயின் நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. பத்திரிகை ஒன்றிற்கு பேட்டிளித்த அவர் இந்தக் குழந்தை எனது மகள் அல்ல இது எனது பேத்தி என்று தெரிவித்தார்.

ஒப்ரெகனுக்கு ஒரே ஒரு மகன் மட்டும்தான் இருந்தார் அவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இந்நிலையில் அவரது உறைய வைத்த விந்துவின் மூலம் கியூபா நாட்டு வாடகை தாய் மூலமாக பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து இருக்கிறார் அனா ஒப்ரெகன். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் இறந்து போன எனது மகனின் கடைசி ஆசையை நான் எவ்வாறு நிறைவேற்றாமல் இருக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்  குழந்தையை இழந்த பெற்றோர்களுக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும்  கூறியிருக்கிறார் அவர். இந்த சம்பவத்தை பெண்களுக்கு எதிரான உச்சபட்ச கொடுமை என அமைச்சர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

spain actress and tv presenter adopt a child whch is from her son frozen sperms


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->