சிங்கப்பூர் அதிபர் மற்றும் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டு, பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்ட நிலையில்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்(வயது 53) மற்றும் கலாசாரம், சமூகம், இளைஞர்கள் நல மந்திரி டாங்குக்கும் (52) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 28 நாட்களில் சிங்கப்பூரில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Singapore president and minister confirmed corona infection


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->