ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்.! பள்ளி மாணவி பலி
Schoolgirl killed in stabbing attack in Germany
ஜெர்மனியில் பள்ளிக்கூடம் அருகே கத்திக்குத்து தாக்குதலில் பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.
ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான உல்மில் உள்ள பொலிசார் அருகிலுள்ள இல்லர்கிர்ச்பெர்க்கில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அப்பகுதிக்கு கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு மாணவிகளை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் நடத்திய கத்தி குத்தி தாக்குதலில் பலத்த காயமடைந்த 14 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளை அப்பகுதியில் இருந்தவர்கள் வீட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவர்களில் 14 வயதுடைய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரத்தக்கரை படிந்த கத்தியுடன் பதுங்கி இருந்த 27 வயதுடைய வாலிபரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் எரித்திரியா நாட்டிலிருந்து அகதியாக ஜெர்மனிக்கு வந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் அந்த வாலிபரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Schoolgirl killed in stabbing attack in Germany