14 வயது மாணவருக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பள்ளி பெண் ஊழியர்: பணியில் இருந்து நீக்கம்..! - Seithipunal
Seithipunal


14 வயது மாணவர் ஒருவருக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பிய பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 14 வயது மாணவர் ஒருவருக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளியின் பெண் ஊழியர் தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டின் பேரில், பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 09-ஆம் தேதி, கிரேட்டர் சதர்ன் டியர் பள்ளி வளாகத்தில் இது குறித்த புகார்கிடைத்துள்ளது. குறித்த புகாரின் அடிப்படையில் செமங் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தினர். அப்போது, எல்மிரா நகரைச் சேர்ந்த 22 வயதான அனமாரியா மிலாசோ என்ற அந்த பெண் ஊழியர், 14 வயது மாணவருக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பியது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி அனமாரியா மிலாசோ கைது செய்யப்பட்டதாக செமங் கவுண்டி ஷெரிப் அலுவலகம் அறிவித்துள்ளது. அவர் மீது சிறுவர்களுக்குத் ஆபாச படங்களை அனுப்பியது, குழந்தையின் நலனுக்கு ஆபத்து விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நியூயார்க்கின் ரொக்கமில்லா ஜாமீன் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்படாமல் உடனடியாக விடுவிக்கப்பட்ட்டுள்ளார். அத்துடன், அவரை வெல்ஸ்பர்க் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவுச் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மிலாசோ பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School employee fired for sending nude photos to 14 year old student


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->