ரஷ்யா-பாகிஸ்தான் இடையேயான கச்சா எண்ணெய் ஒப்பந்தம் - ரஷ்ய தூதர் மறுப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் பணவீக்கம் மற்றும் கடன் பிரச்சனை காரணமாக டீசல் பெட்ரோல் விட்டேன் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. 

இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தையை ஷபாஸ் ஷெரீப் அரசு நிறுத்தி விட்டதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஹம்மாத் அசார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தானுக்கான ரஷிய தூதர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சந்திப்பில் கச்சா எண்ணெய் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தமும் நடைபெறவில்லை என்று ஜெனரல் ஆன்ட்ரே விக்டோரோவிச் பெட்ரோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையான வர்த்தக உறவுகளை பெரிதும் பாதித்துள்ளன என்று கூறினார்.

ரஷ்யா பாகிஸ்தான் இடையேயான உறவுகளை அதிகரிக்கவும், பாகிஸ்தானுக்கு பலதுறைகளில் ரஷ்யா முக்கிய பங்காக இருக்க ரஷ்ய அதிபர் புதின் விரும்புவதாக ஜெனரல் ஆன்ட்ரே விக்டோரோவிச் பெட்ரோவ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian ambassador denies agreement with Pakistan on oil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->