உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் ஏவுகனை தாக்குதல் நடத்திய ரஷ்யா.!
Russia missile attack two children injured
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளி நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் ரஷ்ய படைகள் பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் இடிபாடுகளில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
English Summary
Russia missile attack two children injured