போரில் உயிரிழந்த 1212 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்த ரஷியா..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் மேற்காசிய துருக்கியின் இஸ்தான்புல்லில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

இதன் போது நிபந்தனையின்றி போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், சிறை கைதிகளை பரிமாறிக் கொள்ள வேண்டும் எனவும், இறந்த உக்ரைன் வீரர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது.

இதன் அடிப்படையில் போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் 1,212 பேரின் உடல்களை ரஷ்யா நேற்று உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. ஆனால், நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டதோடு, உக்ரைன் சிறைக் கைதிகள் மற்றும் இறந்த வீரர்கள் உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது.

அதன்படி குளிரூட்டப்பட்ட ஏராளமான சரக்கு லாரிகளில் 1,212 உடல்களை ஏற்றி உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒப்படைத்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணியில் உக்ரைன் தடய அறிவியல் துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia hands over the bodies of 1212 soldiers killed in the war to Ukraine


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->