ரஷ்யா! சிறுவர் பள்ளியில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி.!
Russia childrens School shoot out two child died
ரஷ்யாவின் சிறுவர் பள்ளியில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா வெஷ்கைமா நகரிலுள்ள சிறுவர் பள்ளியில் திடிரென்று புகுந்த மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கியால் சுட்ட மர்மநபர் 3 பேரை கொன்று விட்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Russia childrens School shoot out two child died