பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பை கிடங்காக மாறிய டிரினா நதி.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா-ஹெர்சகோவினாவின் எல்லைப் பகுதியில் முக்கிய நதியாக கருதப்படும் 'டிரினா' பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

போஸ்னியாவை சுற்றி அமைந்துள்ள நாடுகளிலிருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் டிரினா ஆற்றில் வந்து சேர்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், துருப்பிடித்த பீப்பாய்கள், பயன்படுத்தப்பட்ட டயர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், டிரிஃப்ட்வுட் மற்றும் பிற குப்பைகளால் டிரினா நதி காணப்படுகிறது.

மேலும் போஸ்னியா, செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவில் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்ந்து ஆற்றின் ஒரு பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. டிரினா நதி பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்டிருப்பதால், நதியில் வாழும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

River Trina turns into landfill due to plastic


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->