அமெரிக்காவில் நிகழ்ந்த சோகம்...! இந்திய வாலிபர் தற்கொலை...கனவு தேசத்தில் சிதைந்த வாழ்க்கை...! பின்னணி என்ன?
ragedy in America Indian youth commits suicide ruined life land dreams What background
ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்து இராகனாபொய்னா, உயர்கல்வி கனவுகளை மனதில் கொண்டு அமெரிக்காவுக்கு பயணம் செய்த இளைஞர்.
சிகாகோ நகரில் அமைந்துள்ள டேபால் பல்கலைக்கழகம் கல்வி நிலையத்தில் முதுநிலை படிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு செய்த அவர், அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் டெல் நிறுவனத்தில் கணினி துறையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், எதிர்பாராத முறையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியே இதற்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அவரது நண்பர் ராஜேஷ் குர்ராம் நிதி திரட்டும் முயற்சிக்காக பகிர்ந்த தகவலில், “பல சர்வதேச மாணவர்களைப் போலவே நம்பிக்கையும் உயர்ந்த இலக்குகளும் கொண்டவராக சந்து அமெரிக்கா வந்தார்.
மனிதநேயத்துடன் பழகும் பண்பும், அன்பும் கொண்டவர். நண்பர்களுக்கும் தம்பிக்கும் துணையாக இருந்த அவர், இறுதியில் தாங்க முடியாத சவால்களை எதிர்கொண்டார்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சந்துவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று வரை ரூ.56.90 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு பின்னுள்ள சூழ்நிலைகளை குறித்து உள்ளூர் காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
ragedy in America Indian youth commits suicide ruined life land dreams What background