பேரதிர்ச்சியில் பாகிஸ்தானியர்கள்! கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
Pakistanis in shock Death toll in building collapse rises to 27
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கராச்சியிலுள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடமுள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து சரிந்தது.

மேலும், கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி,இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்,விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அவ்வகையில்,, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு மீட்டு வருகின்றனர்.
English Summary
Pakistanis in shock Death toll in building collapse rises to 27