பேரதிர்ச்சியில் பாகிஸ்தானியர்கள்! கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான எண்ணிக்கை 27 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கராச்சியிலுள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடமுள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து சரிந்தது.

மேலும், கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி,இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அவ்வகையில்,, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு மீட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistanis in shock Death toll in building collapse rises to 27


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->