வளைவில் திரும்புகையில் அரங்கேறிய விபத்து.. 13 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.!
Pakistan Van Fire Accident 13 Passengers died
பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் இருக்கும் ஐதராபாத் நகரில் இருந்து, அங்குள்ள கராச்சி நகருக்கு பயணிகள் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த வேனில் 20 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
இந்த வேன் அங்குள்ள கராச்சி - ஐதராபாத் நெடுஞ்சாலையில் இருக்கும் சாலை வளைவில் திரும்பிக்கொண்டு இருக்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்துள்ளது. வேனில் இருந்த பெட்ரோல் டேங்க் தீப்பற்றி அறிந்துள்ளது.
இதனால் வேனிற்குள் சிக்கியிருந்த அனைவரும் மரண ஓலமிட்டு அலறிய நிலையில், சக வாகன ஓட்டிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியான நிலையில், 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pakistan Van Fire Accident 13 Passengers died