பாகிஸ்தான் ராணுவ தளபதி மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார்: வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார் என்றும், அவரது பேச்சுக்கு பிறகே காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:- பஹல்காமில், சுற்றுலா பயணிகளை அவர்களின் மதத்தை உறுதி செய்த பிறகு குடும்பத்தினர் முன்பு பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.

காஷ்மீரின் முக்கிய பொருளாதாரமாக இருக்கும் சுற்றுலாத்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இச்செயல் நடந்துள்ளதாகவும், வேண்டும் என்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

அத்துடன், பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அந்நாட்டின் ராணுவ தளபதியான ஜெனரல் அசிம் முனீர் தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார் என்றும், அவர் வெளிப்படுத்திய கருத்துக்கும், பஹல்காமில் நடந்ததற்கும் தொடர்பு உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan Army Chief is being driven by religious sentiments External Affairs Minister Interview


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->