#அமெரிக்கா || தொழிற்சாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் தொழிற்சாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா பால்டிமோர் நகரில் இருந்து 75 மைல் தொலைவில் மேரிலேண்ட் ஸ்மித்ஸ்பர்க் நகரிலுள்ள கொலம்பியா இயந்திர தொழிற்சாலைக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களின் மீது பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்தும், மர்ம நபர் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious shooting at an American factory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->